• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home ஆதியின் கடிதம்

நாற்பதாண்டு நண்பர் தலைவர் அழகிரி – ஆ. கோபண்ணா

by ஆ. கோபண்ணா
22/10/2020
in ஆதியின் கடிதம்
0
நாற்பதாண்டு நண்பர் தலைவர் அழகிரி – ஆ. கோபண்ணா

ஆ.கோபண்ணா அவர்களின் தந்தை திரு ஆதி ராகவ ரெட்டியார் அவர்களின் 80வது பிறந்தநாளில் (2.8.1998)மக்கள் தலைவர் திரு ஜி.கே.மூப்பனார் நேரில் வந்து வாழ்த்தியபோது எடுத்த படம். திரு எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், திரு கே.எஸ்.அழகிரி ஆகியோர் உடனிருக்கிறார்கள்.

Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

இனிய நண்பர்களே,

1969 இல் ஏற்பட்ட காங்கிரஸ் பிளவிற்குப் பிறகு அருமை நண்பர் அழகிரி அவர்கள் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். ஆனால், நானோ பெரு;தலைவர் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன். அக்காலகட்டங்களில் சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தங்கியிருந்த எனது தந்தைக்கும், மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த க. ஜெகவீரபாண்டியன் அவர்களுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த நட்பிற்குக் காரணமாக இருந்தவர் பூதலூர் எம். ஆறுமுகசாமி. அவர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் துணைத் தலைவராக இருந்தார். அவர்களோடு நண்பர் அழகிரிக்கு ஏற்பட்ட நட்பு காரணமாக என் தந்தையோடும் பழகுகிற வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. அந்த வகையில் எனக்கும் நண்பர் அழகிரி 1970-களில் அறிமுகமானார்.  1970-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படிப்பதற்காக நான் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது அழகிரியும் அங்கே படித்து கொண்டிருந்தார்.

அண்ணமலை பல்கலைக் கழகத்தில் எனது படிப்பை முடித்து விட்டு 1980-களில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக எம்.பி. சுப்பிரமணியம் அவர்கள் பொறுப்பு வகித்த போது, நண்பர் அழகிரியோடு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அந்த காலகட்டங்களில் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஜெகவீரபாண்டியன், கே.எஸ். அழகிரி, திண்டிவனம் ஜெயகோபால், அரியலூர் ஜி. ராஜேந்திரன் இப்படி பலரது நட்பு எனக்கு ஏற்பட்டது.

ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக  எனக்கும், இன்றைய காங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்களுக்கும் மிகமிக நெருக்கமான நட்பு இருந்தது. முற்போக்கு சிந்தனையும், செயல் திறனும் கொண்ட அவரோடு நானும் இணைந்து ஒரே அரசியல் பாதையில் பயணித்திருக்கிறேன். ஏற்றத்தாழ்வுகளை, எதிர்ப்புகளை  இணைந்தே எதிர்கொண்டிருக்கிறோம். 1984-களில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பழநியாண்டி அவர்கள் இருந்த போது, அவரது தலைமையின் கீழ் பணியாற்றுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பை பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரித்து அவர்கள் மூலமாக அன்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்த ஜி.கே. மூப்பனார் அவர்களைச் சந்திக்கிற வாய்ப்பை பெற்ற பிறகு மிகத் தீவிரமான அரசியல் ஈடுபடுகிற சூழ்நிலை உருவானது. இதனால் வழக்கறிஞர் தொழிலில் இருந்து விலகி, முழுநேர அரசியல் ஊழியராக மாறினேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பழனியாண்டி அவர்களோடு இணைந்து பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர்களான ஏ.ஆர். மாரிமுத்து, சோ. பாலகிருஷ்ணன், உ. சுப்பிரமணியம், என். ராமசாமி உடையார், எஸ்.ஜி. விநாயகமூர்த்தி ஆகியோரோடு அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பும், இணைந்து பணியாற்றுகிற சூழலும் ஏற்பட்டது. அந்த காலகட்டங்களில் நண்பர் அழகிரி அவர்களுக்கும், எனக்கும் அரசியல் ரீதியாக மிகமிக நெருக்கமான நட்பு உருவானது. அவர் சென்னை வருகிறபோதெல்லாம் நாங்கள் இருவரும் இணைந்தே இருப்பது ஒரு நடைமுறையாகவே இருந்தது. 1980, 1984 பொதுத்தேர்தல்களில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு, பிறகு மறுக்கப்பட்டது. அதேபோல, 1989 லும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலின் மூலமாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்று அவரது திறமையைத் தமிழகம் அறியக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவரது அரசியல் வாழ்க்கை என்பது எதிர்நீச்சலாகவே இருந்தது. தடைகளை தகர்த்து, உயர்நிலைக்கு வந்த பெருமை அவருக்கு உண்டு.

நண்பர் அழகிரி இளமைப் பருவம் முதல் நல்ல சிந்தனையும், செயல் திறனும் மிக்கவராக விளங்கியவர். அற்புதமான சொற்பொழிவாளர். தங்கு தடையின்றி மணிக் கணக்காகப் பேசக் கூடியவர். ஆழமான, சிக்கலான கருத்துக்களை தமது வாதத் திறமையால் வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலைப் பெற்றவர். இதனால் சட்டமன்றத்தில் தமது பேச்சுவன்மையாலும், வாதத் திறமையாலும் அனைவரும் வியக்கும் வகையில் ஜொலிக்க ஆரம்பித்தார். இவரது சட்டமன்ற பணியைப் பாராட்டாதவர்களே இருக்க முடியாது என்ற வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் நண்பர் அழகிரி. ஒருமுறை சட்டமன்றத்தில் அழகிரி உரையாற்றிக் கொண்டிருந்த போது, வசந்த மண்டபத்தில் இருந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வேகமாக சட்டமன்றத்திற்கு உள்ளே நுழைந்தார். அப்போது, ஒலிபெருக்கி மூலமாக, ‘அழகிரியின் அழகான தமிழ் பேச்சைக் கேட்க சட்டமன்றத்திற்குள் ஓடோடி வந்தேன்’ என்று குறிப்பிட்டதை எவரும் மறந்திட இயலாது. அந்தளவிற்கு தி.மு. கழக தலைவர் கலைஞர், பேராசிரியர், நாவலர் உள்ளிட்ட அனைவரது பாராட்டுக்களையும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பெற்றவர் அழகிரி.

ஒருமுறை பேராசிரியர் அவர்களை நண்பர் அழகிரியுடன் நான் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது, ‘நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்ட போது, ‘கீரப்பாளையம்’ என்று நண்பர் அழகிரி கூறினார். அதைக் கேட்டதும், ‘கீரப்பாளையத்தில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சம்மந்தத்தை தங்களுக்குத் தெரியுமா?’ என்று வினவினார். உடனே, அழகிரி அவர்கள், ‘அவரது மகன் தான் நான்’ என்று சொன்னதும், பேராசிரியர் அடைந்த மகிழ்ச்சிக்கும், அதிர்ச்சிக்கும் எல்லையே இல்லை. உடனே பேராசிரியர் அவர்கள் உங்கள் உரையைக் கவனித்த போது, அதில் சமூக நீதியின் தாக்கம் அதிகமாக இருப்பதை என்னாலே காண முடிந்தது. அதற்குக் காரணம் உங்கள் தந்தையினுடைய பாதிப்பு தான் என்று குறிப்பிட்டார். அதில் கூட திராவிட இயக்கத்தினர் சொந்தம் கொண்டாடி பெருமைப்படுகிற அளவிற்கு நண்பர் அழகிரியின் உரைகள் அமைந்திருந்தன. இவற்றையெல்லாம் மிக மிக அருகிலிருந்து ரசித்து மகிழ்ந்தவன் நான்.

ஒரு காலகட்டத்தில் நண்பர் அழகிரியின் அரசியல் உயர்வே என்னுடைய உயர்வு என்று கருதி பழகிய காலங்கள் உண்டு. சட்டமன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் அவர்களோடு மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றியவன். அந்த காலகட்டங்களில் நண்பர் அழகிரியும் அந்த நட்பு வட்டத்திற்குள் இருந்தவர். இன்றைக்கும் அந்த பசுமையான நட்பு மலரும் நினைவுகளாகவே இருக்கின்றன.

நீண்ட நெடிய நண்பராக இருந்த அழகிரி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றபோது மிகுந்த மகிழ்ச்சியாகவே இருந்தது. அவர் தலைவராக வருவார் என்று நினைத்துப் பார்க்க முடியாத சூழலில், தலைவராக வந்து என்னைப் போன்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கியவர் நண்பர் அழகிரி. அவர் தலைமைப் பொறுப்பை ஏற்று ஏறத்தாழ 21 மாதங்கள் உருண்டோடி விட்டன. நான் தூங்குகிற நேரம் தவிர, முழுநேரமாகத் தலைவர் அழகிரி அவர்களையும், தமிழ்நாடு காங்கிரஸ் சம்பந்தமான பணிகளை மட்டுமே செய்து வருகிறேன். முழுநேரமாக இயக்கப் பணிகள் ஆற்றுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியவர் தலைவர் அழகிரி. நண்பர் அழகிரி, தலைவர் அழகிரியாக வந்தது முதற்கொண்டு எனக்குப் பொறுப்புகளும், கடமைகளும் அதிகரித்து விட்டன. அந்த வாய்ப்பை பயன்படுத்தி பணிகளைச் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தலைவர் அழகிரி மூலமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதற்கு அரிய வாய்ப்பாக இதை கருதி, என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறேன்.

நீண்டகால நண்பரான தலைவர் அழகிரி அவர்களுடைய பிறந்தநாள் விழா தொண்டர்களின் விழாவாக இன்றைக்கு நடைபெற்றிருக்கிறது. இனி வருகிற காலங்களிலே அவரது தலைமையில் தீவிரமாக செயல்பட்டு மே 2021 இல் நடைபெறுகிற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிற அளவிற்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

நான் ஒரு விதியை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ் தலைமை யாரைத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கிறதோ, அவரது தலைமையை ஏற்றுக் கொண்டு அவர் மூலமாக, அவர் இட்ட பணிகளைச் செய்து முடிக்கிற வகையில் எனது கட்சிப் பணிகளை நான் அமைத்துக் கொண்டுள்ளேன். அந்த வகையில் எனது நீண்டகால நண்பர், காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அதனால் எனக்குக் கூடுதல் சுமையும், நம்பகத்தன்மையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி, தமிழக காங்கிரஸ் கட்சியை தலைவர் அழகிரி தலைமையில் வளர்த்தெடுப்பதே எனது நோக்கம் என்று அவரது பிறந்தநாளில் உறுதியேற்க விரும்புகிறேன். இதைப்போன்ற உறுதியை அனைத்து காங்கிரஸ் நண்பர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை செய்வதன் மூலம் ஒளிமயமான எதிர்காலம் காங்கிரஸ் கட்சிக்குக் காத்திருக்கிறது.

சமீபகாலமாக கொரோனா தொற்று கடுமையாக இருக்கிற சூழலில் அதைக் கடுகளவும் பொருட்படுத்தாமல் காங்கிரஸ் கட்சியின் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என அடிக்கடி பங்கேற்று தலைவர் அழகிரி அவர்கள் செயல்பட்டு வருவதை மாற்றுக் கட்சியினர் என்னிடம் பலமுறை வியந்து பேசியிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் கூட தலைவர் அழகிரி இப்படிச் செயல்படுகிறாரே, அவரது உடல் நலத்தைப் பார்க்கச் சொல்லுங்கள் என பலர் என்னிடம் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், அவற்றையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் தமக்கு என்ன நேர்ந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சமீபத்தில் நடந்த திருவண்ணாமலை விவசாயிகள் மாநாடு, தேனியில் தடையை மீறி நடந்த விவசாயிகள் பேரணி ஆகியவற்றில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியைத் தூக்கி நிறுத்துகிற பணியில் சாதனை படைத்தவர் தலைவர் அழகிரி. இதைச் சொல்வதற்குக் காரணம் தமிழக காங்கிரசின் 50 ஆண்டுகால அரசியலை நாள்தோறும் கூர்ந்து கவனித்தவன் என்ற அடிப்படையிலேயே இதைக் கூறுகிறேன். எந்தவித பாரபட்சமின்றி இந்த கருத்தைக் கூறுவதில் நான் பெருமைப்படுகிறேன். தனிப்பட்ட முறையில் அவரை புகழ்ந்து பேசி பலன்களை அடைய வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அதற்கு அவசியமும் இல்லை.

என் வாழ்நாளில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக ஆக வேண்டுமென்று நினைத்து அரசியலில் ஈடுபட்டதில்லை. அதற்கான முயற்சியில் நான் எப்போதும் விலகியே இருந்து வருகிறேன். எனவே, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, வாராது வந்த மாமணியைப் போல தலைவர் அழகிரி காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்திருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் வலிமை பெற வேண்டுமென்றால் தலைவர் அழகிரி தலைமையில் ஒன்றுபட்டு பணியாற்றினால் ஒளிமயமான எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது.

அருமை காங்கிரஸ் நண்பர்களே, தலைவர் அழகிரி தலைமையில் இணைந்து ஒற்றுமையுடன் பணியாற்றுவோம். வெற்றிகளைக் குவித்து, சாதனைகளைப்  படைப்போம்.

அன்பன்,
ஆ. கோபண்ணா

Previous Post

தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடிய தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் விழா!

Next Post

சொல்லின் செல்வர் அழகிரியை அறிவோம்!

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
சொல்லின் செல்வர் அழகிரியை அறிவோம்!

சொல்லின் செல்வர் அழகிரியை அறிவோம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com