• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home பொருளாதாரம்

பொது முடக்கத்தை சிந்திக்காமல் அறிவித்தார் பிரதமர் மோடி: பொருளாதார வல்லுனர்கள் குற்றச்சாட்டு

by ஆ. கோபண்ணா
04/09/2020
in பொருளாதாரம்
0
பொது முடக்கத்தை சிந்திக்காமல் அறிவித்தார் பிரதமர் மோடி: பொருளாதார வல்லுனர்கள் குற்றச்சாட்டு
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளில், கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான இந்தியாவின்  மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதமாக இருந்தது. ஒட்டுமொத்த கூடுதல் மதிப்பீட்டின் அடிப்படையில், பொருளாதாரம் 22.8 சதவிகிதமாக இருந்தது. இது இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலையையே வெளிப்படுத்துகிறது.

தரவுகளின் உண்மை நிலவரம் இறுதியாக வெளியாகும்போது, நிலைமை இன்னும் மோசமாகும் என்று தெரிகிறது. இந்திய வரலாற்றில் பொருளாதார சூழல் இதுபோல் மோசமான நிலையில் இருந்ததில்லை.

இதுபோன்று பொருளாதாரம் சுருங்கியதை கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா சந்தித்ததில்லை. கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவுகளை வெளியிட்டு வரும் நிலையில், மோசமான வீழ்ச்சி ஏற்படுவது இதுதான் முதல்முறை.

ஆனால், இது ஒன்றரை நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் அசாதாரணமான சூழல் என்று அரசு கூறுகிறது. ஆனால், அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரோ, கொரோனா மற்றும் அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கமே இதற்கு காரணம் என்கிறார்.

முன்னதாக, இந்தியாவில் இதுவரை இல்லாத பொருளாதார வீழ்ச்சியை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘கடவுளின் செயல்’ என்று குற்றம் சாட்டியிருந்தார். வைரஸ் அனைத்து நாடுகளிலும் குறைந்துவிட்டது என்பதும், இந்தியாவின் பொருளாதார மந்தநிலையால் ஆபத்து இல்லை என்பது மத்திய அரசின் கருத்தாக உள்ளது.

ஆனால், சமூக ஊடகங்களில் இயங்கும் பா.ஜ.க.வினரோ, ஒரு படி மேலே போய், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைவிட, இந்தியாவின் பொருளாதார மந்தநிலை குறைவாக இருப்பதாகவும், இது குறித்து போலி செய்திகள் பரப்பப்படுவதாகவும் பதிவிடுகின்றனர்.  உலகின் பல நாடுகளிலும் கொரோனா பரவல் குறைந்துவிட்டது உண்மைதான். ஆனால், சுருங்கிப் போன பொருளாதாரத்தை ஒப்பிடும் போது, மற்ற நாடுகளை விட இந்தியா மோசமான நிலையிலேயே உள்ளது.

இது குறித்து பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்பான கட்டுரையாளர் விவேக் கவுல் கூறும்போது, ”பெரிய நாடு, சிறிய நாடு என்ற பாகுபாடு இன்றி, கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்படும் பொது முடக்கம் உலகிலேயே மிகக் கடுமையானது. இது பொருளாதார நடவடிக்கைகளை முடக்கிவிட்டது. விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் பிரதமர் நரேந்திர மோடி பொது முடக்கத்தை அறிவித்துவிட்டார்” என்றார்.

”பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா பரவல் முக்கிய காரணம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்கு முன்பே, பொருளாதார சரிவு இருந்தது என்று மத்திய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன. இதன் தாக்கம் அனைத்துத் துறைகளிலும் பரவியது” என்று பொருளாதார நிபுணர்கள் குமார் தாஸ் மற்றும் ஜாய்தீப் பருவா ஆகியோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜாய்தீப் பருவா கூறும்போது, ”கொரோனா தாக்குதலுக்கு முன்பு, இந்திய பொருளாதாரம் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் மந்தநிலையில் இருந்தது. பொருளாதாரம் ஏற்கனவே தோல்வியுற்ற நிலையில், கொரோனாவினால் ஏற்பட்ட கூடுதல் தாக்குதலை தாங்க முடியவில்லை” என்றார்.

Tags: Covid-19EconomyGDP
Previous Post

சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யும் பா.ஜ.க.அரசு! கொரோனா காலத்தில் 18 கோடி குடும்பங்களை பாதிக்கும் மோடி அரசின் கொடூர நடவடிக்கை!

Next Post

கேள்வி நேரம் ரத்து: ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தும் மோடி அரசு

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
கேள்வி நேரம் ரத்து: ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தும் மோடி அரசு

கேள்வி நேரம் ரத்து: ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தும் மோடி அரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com