• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home மதச்சார்பின்மை

இது எங்கள் இந்தியா! எங்களை எவரும் வெளியேற்ற முடியாது! சிறையில் தள்ள காரணமான டாக்டர் கஃபீல் கானின் பேச்சு!

by Admin
03/09/2020
in மதச்சார்பின்மை
0
இது எங்கள் இந்தியா! எங்களை எவரும் வெளியேற்ற முடியாது! சிறையில் தள்ள காரணமான டாக்டர் கஃபீல் கானின் பேச்சு!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

கடந்த 2019 ஆம் ஆண்டு அலிகார் பல்கலைக் கழகத்தில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் மத்தியில் டாக்டர் கஃபீல் கான் பேசியதால், அவரை கடந்த பிப்ரவரி மாதம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரா சிறையில் அடைத்தது உத்தரப் பிரதேச பா.ஜ.க. அரசு.

7 மாதங்களுக்குப் பிறகு, கடந்த ஒன்றாம் தேதி அவரை விடுதலை செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அலிகார் பல்கலைக்கழகத்தில் அவர் பேசிய பேச்சில் எந்த தவறும் இல்லை என்று தீர்ப்பளித்தது.

அலிகார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் கஃபீல் கான் ஆற்றிய உரை இதுதான்:

”ஒட்டுமொத்த உலகமே நம்மை எதிர்த்து நின்றாலும். நாம் இன்னும் சிறப்புடன் இருக்க வேண்டும்” என்ற கவிஞர் அல்லாமா இக்பால் சாஹபின் கவிதை வரிகளுடன் இந்த உரையை தொடங்குகின்றேன்…(மாணவர்கள் கரகோஷம்)

அலிகார் பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் முன்பு, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில், ”உள்ளே செல்லாதீர்கள், மீறிச் சென்றால் கம்பிகளுக்கு பின்னால் வைக்கப்படுவீர்கள்” என்று மிரட்டினர். (வெட்கக்கேடு…வெட்கக்கேடு என மாணவர்கள் கோஷம்)

நமது குழந்தைப் பருவத்தில் இருந்தே, நாம் இந்துக்கள் என்றோ, முஸ்லீம்கள் என்றோ சொல்லி வளரவில்லை. ஆனால், மனிதநேயம் குறித்து நமக்கு கற்பிக்கப்பட்டது. ஆனால் அமித்ஷாவோ, நாம் மனிதர்களாக வேண்டாம், இந்துக்களாக, முஸ்லீம்களாக மாற வேண்டும் என நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தன் உடையில் படிந்த ரத்தத்தை மறைக்க கொலைகாரன் எப்படி முயற்சிப்பானோ, அதுபோன்றுதான் இவர்களது செயல்பாடுகளும் அமைந்துள்ளன.  கடந்த 1928 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்தே, அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தனர். அதனால் தான் நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை சட்டவிரோதம் என்று திரும்பத் திரும்பச் சொல்கின்றோம். அவரது சட்டம் இந்தியாவின் பன்முகத்தன்மை, மத நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்துக்கு எதிராக உள்ளது.

நாம் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பாபா சாகேப் அம்பேத்காரின் அரசியல் சாசனத்தை நம்பாதவர்கள் மற்றும் அதனை இதுவரை படிக்காதவர்களுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். கடந்த 90 ஆண்டுகளாக, நாட்டைப் பிளவுபடுத்துவதே அவர்களது முக்கிய நோக்கமாக இருக்கிறது.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தியதால், 19 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 90 சதவிகித்தினர், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்களை உட்படுத்த விரும்பியவர்கள். எதை முதலில் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு புரியவில்லை.  

 நம்மைச் சுற்றி சிறிய சுவரை  எழுப்ப அவர்கள் முயற்சிக்கிறார்கள். அதன்பிறகு, அவர்கள் முழுக் கட்டுமானத்தையும் முடித்துவிடுவார்கள். கடந்த 90 ஆண்டுகளாக நம் இளைஞர்கள் மத்தியில் மதத்தின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிறுபான்மையினத்தவரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி வருகின்றனர்.

இந்த அரசு சிறுபான்மையினருக்கானது அல்ல என்பதை தொடர்ந்து  நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் போய் நிற்கும் போது, உண்மையான முகத்தை வெளிப்படுத்துவார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், எதிர்ப்பதற்கும் இதுவே காரணம். குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மாநிலத்துக்காக கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த முயற்சிக்கின்றனர். இதன்படி, 1950 முதல் 1987 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருந்தால் மட்டுமே ஒருவர் இந்திய பிரஜையாகக் கருதப்படுவார். அதற்கான பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்காதவர் இந்தியர் இல்லை என்று கருதப்படுவார். இந்த சட்டத்தைப் பயன்படுத்தி முஸ்லீம்களை இந்திய குடிமக்கள் இல்லை என்று அறிவிப்பதுதான் அவர்களது உள்நோக்கம் என்பது நமக்கு புரியும்.

அவர்கள் எண்ணம் என்ன? என்பதும், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் நமக்கு தெரியும். அவர்கள் மனம் முழுவதும் வெறுப்பு நிறைந்துள்ளது. நமது பெற்றோரின் சான்றிதழ், சட்டப்பூர்வ ஆவணங்களைத் தேடி நம்மை அலையவிட வேண்டும் என்பதே அவர்களது உள்நோக்கமாக இருக்கிறது. இவ்வாறு தான் கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் அவர்கள் பிரச்சினையை ஏற்படுத்த முனைகிறார்கள்.

அனைவரையும் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவிடுவார்கள் என பரவும் வதந்தியை நம்பவேண்டாம். இது சாத்தியமில்லாதது. அசாமில் உள்ள 6 லட்சம் மக்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப வேண்டுமானால், பட்ஜெட்டில் 23 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.  தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த அசாமில் மட்டும் ரூ. 1,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதனை செயல்படுத்த ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

கல்வியை இலவசமாக வழங்குமாறு நாம் கேட்கும் போது, அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணத்தை உயர்த்துகிறார்கள்.

ஆக்ஸிஜன் வசதி  இல்லாமல் உத்தரப் பிரதேசத்தில் 70 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தியா முழுவதும் மருத்துவ வசதி  இல்லாமல் ஆண்டுதோறும் 8  லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. ஐ.நா., யுனிசெப், உலக வங்கி மற்றும் உலக சுகாதார அமைப்பிடம் இருந்து பெற்ற தரவுகள் கவலையை ஏற்படுத்துகின்றன. இந்தியாவின் மக்கள் தொகையில் சரி பாதி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

எய்ட்ஸ் பாதிப்பில் உலகத்திலேயே 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் உலக அளவில் இந்தியா 2 ஆம் இடத்தில் உள்ளது. 72 சதவிகித மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், டாக்டரிடம் செல்ல 40 கி.மீ. பயணிக்க வேண்டியுள்ளது.

கும்பலாக தாக்குதல் நடத்துவோர், அதனை வீடியோ எடுத்து முகநூலில் பதிவிடுகிறார்கள். டெல்லியில் உள்ள தங்கள் எஜமானர்கள் இதனை பார்த்து சந்தோஷப்பட வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள். அவர்கள் பேசும் தேசியம் என்பது, போலி இந்துயிசத்தின் அடிப்படையிலான போலி தேசியம்.

ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த சம்பத்தில், என் மீது கொலைப் பழி சுமத்தவும், ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கியதில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டவும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முயற்சி செய்தார்.

இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையில், ”என் சொந்த பணத்தில் இருந்து மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கிக் கொடுத்ததாக” குறிப்பிட்டிருந்தனர். என்னை எப்படியாவது சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். அதனால் தான் அரசுக்கு எதிராக நான் பேசுவதாகக் கூறுகிறார்கள். என்னை மீண்டும், மீண்டும் சஸ்பெண்ட் செய்கிறார்கள்.

இந்த நேரத்தில் கொடுமையைப் பற்றி நான் பேசாவிட்டால், வேறு யார் பேசுவது? இந்த கடுமையான சட்டத்தை எதிர்த்து முஸ்லீம்கள் மட்டுமல்ல, அனைவரும் போராட வேண்டும். மதத்தின் அடிப்படையிலான குடியுரிமை சட்டம் குறித்து, நமது அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டுள்ளதா? நாம் இந்த உலகத்தின் குடிமக்கள். அரசியல்வாதிகள் தான் தங்கள் சுயலாபத்துக்காக எல்லையை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த நாடு நம்முடையது. இந்தியா குறிப்பிட்ட ஒருவரின் சொத்து அல்ல. எங்களை வெளியேற்றும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. நாங்கள் 25 கோடி பேர் இருக்கிறோம். எங்களை, கும்பலை வைத்து மிரட்டவோ அல்லது இதுபோன்ற சட்டங்களை வைத்து மிரட்டவோ முடியாது. நாங்கள் ஒற்றுமையுடன் உள்ளோம். சுவரைப் போல் நாங்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக இருக்கிறோம். இது எங்கள் இந்தியா. இங்கிருந்து எங்களை எப்படி வெளியேற்ற முடியும்?

இவ்வாறு மருத்துவர் கஃபீல் கான் பேசினார். இந்த பேச்சுக்காகத்தான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை 7 மாதங்கள் சிறையில் அடைத்து அராஜகத்தை நிகழ்த்தியிருக்கிறது உத்தரப்பிரதேச பா.ஜ.க. அரசு.

டாக்டர் கஃபீல் கானுக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்த டாக்டர் கஃபீல் கானை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததும், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்தார். அப்போது, நீதியை விரும்பும் மக்களுக்கும், கான் விடுதலைக்கு பாடுபட்ட உத்தரப்பிரதேச காங்கிரஸாருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். கான் விடுதலையானதும் அவரிடம்  தொலைபேசியில் பிரியங்கா காந்தி நலம் விசாரித்தார்.

Tags: Kafeel KhanNSA
Previous Post

மூத்த பத்திரிகையாளர், தகவல் களஞ்சியம் அ. துரைக்கண்ணு மறைந்தார்!

Next Post

மதம் பிடித்த ஹெச். ராஜா; பம்மும் காவல் துறை: கொலையை திசை திருப்பும் கேவலம்

Admin

Admin

Next Post
மதம் பிடித்த ஹெச். ராஜா; பம்மும் காவல் துறை: கொலையை திசை திருப்பும் கேவலம்

மதம் பிடித்த ஹெச். ராஜா; பம்மும் காவல் துறை: கொலையை திசை திருப்பும் கேவலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com