• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

தேர்தலில் போட்டியிடாதோர் கட்சி தேர்தல் நடத்த கோருகின்றனர்: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜகார்

by Admin
02/09/2020
in தேசிய அரசியல்
0
தேர்தலில் போட்டியிடாதோர் கட்சி தேர்தல் நடத்த கோருகின்றனர்: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜகார்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

தேர்தலில் இதுவரை போட்டியிடாதவர்கள் தான் காங்கிரஸ் கட்சியின் அமைப்புத் தேர்தலை நடத்த வேண்டும் என கோருவதாக, பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் ஜகார் குற்றம் சாட்டியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமைப்புத் தேர்தலை நடத்தக் கோரி, இடைக் காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் தலைவர்களை, பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் ஜகார் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதன் மூலம், அவர்களது பாதுகாப்பின்மையும் அரசியல் நோக்கமும் வெளிப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவர் மற்றும் கட்சி அமைப்புத் தேர்தல் 6 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். எனினும், சில தலைவர்கள் தொடர்ந்து தேவையற்ற அறிக்கைகளை விடுப்பது துரதிஷ்டவசமானது.

கட்சி அமைப்புத் தேர்தலை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தும் தலைவர்கள், இதற்கு முன்பு கட்சி அமைப்புத் தேர்தலில் போட்டியிடாதவர்களாக உள்ளனர். கடைசியாக எப்போது போட்டியிட்டோம் என்பது கூட, அவர்களுக்கு தெரியாது.

இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் நடத்துவதன் மூலம், கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியதாக ராகுல் காந்தியை குற்றம் சாட்டுவது மட்டுமே கடிதத்தில் கையெழுத்திட்ட 23 பேரின் எண்ணமாக உள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் கீழ் அமைப்புகளில் இருந்து தேசிய அளவிலான அமைப்புகள் வரை தேர்தல் நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். இது இரட்டை வேடம் இல்லையா?

இத்தகைய தேர்தல்கள் கட்சியில் பிளவை ஏற்படுத்தாதா? அறிக்கையை வெளியிடும் முன்பு, இது பற்றி தீவிரமாக ஆலோசித்திருக்க வேண்டாமா? தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காகவே, சில தலைவர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற இந்த தலைவர்கள்தான், காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு நிர்வாகிகளை நியமிக்க சோனியா காந்திக்கு முழு அதிகாரம் அளித்தனர். இவர்கள் தான் இப்போது கட்சி அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்துப் பேசுகிறார்கள்.

சில தலைவர்கள் உண்மையிலேயே நம்பிக்கையை இழந்து விட்டனர். கட்சியால் எவ்வளவு உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளோம் என்பதை மறந்துவிட்டார்கள். இத்தகைய உயர்ந்த நிலை, கட்சியில் அவர்களது அனுபவம் மற்றும் பங்களிப்பு காரணமாகவே ஏற்பட்டது.

கூட்டுத் தலைமை குறித்து சில தலைவர்கள் ஆலோசனை கூறியிருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே கட்சியின் கூட்டுத் தலைமையின் ஓர் அங்கமாகவே இருக்கிறார்கள்.

கட்சியில் நானும் ஜனநாயகத்தின் ஆதரவாளர்தான். கட்சிக்குள்ளேயே வழக்கமான சமரசம் இருக்க வேண்டும். அதை செயல்படுத்துவதற்கான முறைகள் பரஸ்பர கலந்துரையாடல் மூலம் அமைய வேண்டும் என்றார்.

Tags: Sunil Jakhar
Previous Post

உடையும் மோடியின் புனிதர் பிம்பம்: களையும் பா.ஜ.க. யோக்கியர் வேடம்

Next Post

பி.எம்.கிசான் திட்டத்தில் பித்தலாட்டம்: லஞ்ச அதிகாரிகளால் விவசாயிகள் தவிப்பு

Admin

Admin

Next Post
பி.எம்.கிசான் திட்டத்தில் பித்தலாட்டம்: லஞ்ச அதிகாரிகளால் விவசாயிகள் தவிப்பு

பி.எம்.கிசான் திட்டத்தில் பித்தலாட்டம்: லஞ்ச அதிகாரிகளால் விவசாயிகள் தவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com