• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home மதச்சார்பின்மை

விருந்தோம்பலை போற்றும் இந்தியாவில் வெளிநாட்டு முஸ்லீம்களை மோசமாக நடத்துவதா? மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்

by ஆ. கோபண்ணா
28/08/2020
in மதச்சார்பின்மை
0
tablighi-jamaat-corona-case
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 29 வெளிநாட்டு முஸ்லீம்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமனறத்தின் அவுரங்காபாத் கிளையில்  மனு தாக்கல் செய்தனர்.தாக்கல் செய்யப்பட்டது.  மனு மீதான விசாரணை நீதிபதிகள் டிவி நளவாடே மற்றும் எம்ஜி ஷெவ்லிகர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்து முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்த நீதிபதிகள், கொரோனா பரவலுக்கு வெளிநாட்டு முஸ்லீம்கள்  பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்த விசயத்தில் இயந்திரத்தனமாகவும் அரசியல் நிர்பந்தத்துடனும் மகாராஷ்ட்ர மாநில அரசு செயல்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற 29 பேர் மீது சுற்றுலா விசா நிபந்தனைகளை மீறியதாக வெளிநாட்டுச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம், நோய் தொற்று தடுப்புச் சட்டம், பேரழிவு மேலாண்மை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வெளிநாட்டு முஸ்லீம்களுக்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது என்றும்,  உலக அளவில்  கொரோனா பரவல் இருக்கும்போது, வெளிநாட்டு முஸ்லீம்களை மகாராஷ்ட்ரா அரசு பலிகடா ஆக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தப்லிக் ஜமாத் மாநாட்டின் மத நடவடிக்கைகளில் அவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிரான பிரச்சாரம் தேவையற்றது என்று கூறியுள்ள நீதிபதிகள், இந்தியாவில் கொரோனா தொற்றின் சமீபத்திய எண்ணிக்கையைப் பார்க்கும்போது, வெளிநாட்டு முஸ்லீம்கள் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்திருக்கக் கூடாது.

இதுபோன்ற தவறான நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள கெட்ட பெயரைப் போக்க நேர்மறையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள நீதிபதிகள், தப்லிக் ஜமாத்தின் சீர்திருத்த இயக்கத்தால் கவரப்பட்டு உலகம் முழுவதும் இருந்து  முஸ்லீம்கள் வருவதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெளிநாட்டு முஸ்லீம்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மசூதிகளுக்குச் செல்ல எந்த தடையும் இல்லை. இவ்வாறு செல்ல நிரந்தரமாக அரசு தடை விதித்திருப்பதாக எந்த ஆவணத்திலும் இல்லை. பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள் வரை, தப்லிக் ஜமாத்தின் மாநாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விருந்தோம்பலை மாபெரும் கலாச்சாரமாகவும் பண்பாடாகவும் இந்திய மக்கள் பின்பற்றி வரும் நிலையில், இத்தகைய நடவடிக்கை ஆச்சரியமளிப்பதாக கூறியுள்ள நீதிபதிகள், கொரோனா பரவிய போது, நமது வெளிநாட்டு விருந்தினர்கள் மீது சகிப்புத்தன்மையையும், உணர்வையும் நாம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, பயண ஆவணங்களில் விதிமீறியதாகவும், கொரோனா தொற்றை   பரப்பியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர்களை சிறையில் அடைத்துள்ளோம் என்றும் நீதிபதிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

வேறு மதத்தினரையோ அல்லது வேறு நாட்டவரையோ நடத்தும் விதத்தில் அரசு வேறுபாட்டைக் காண்பிக்கக் கூடாது என்று கூறியுள்ள நீதிபதிகள், வெளிநாட்டு முஸ்லீம்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, மசூதிகளின் நிர்வாகிகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 6 முஸ்லீம்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதையும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சொந்த நாடுகளுக்கு திரும்ப விமான நிலையங்களுக்கு சென்றவர்களை, கொரோனா சோதனை அறிக்கை இன்றி அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டதால் தான், அவர்கள் பல மாநிலங்களில் உள்ள மசூதிகளுக்கு சென்றுள்ளனர். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதும் விடுதிகள் மூடப்பட்டதால் அவர்கள் மசூதிகளில் தங்க வைக்கப்பட்டனர் என்று தெரிவித்த நீதிபதிகள், வெளிநாட்டு முஸ்லீம்கள் இந்தியாவில் உள்ள மசூதிகளுக்கு செல்லக் கூடாது என்று ஏதும் தடை இருக்கிறதா? என அரசு தரப்பைப் பார்த்து கேள்வி எழுப்பினர்.

சில கருத்துகளில் ஒரு நீதிபதி மாறுபட்டிருந்தாலும், 29 வெளிநாட்டவர்கள் மீதான வழக்கை நீதிபதிகள் இணைந்தே ரத்து செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Bombay High CourtTablighi Jamaat
Previous Post

வங்கிக் கடன் தவணையை நிறுத்தி வைக்கப்பட்ட காலத்தில் வட்டியை வசூலிக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்! பிரதமர் கிசான் திட்டத்தில் ரூபாய் 1000 கோடி முறைகேடு!

Next Post

பணம் மட்டும் வேண்டும், கேள்வி கூடாதா?: நீடிக்கும் பிஎம் கேர்ஸ் மர்மம்

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
பணம் மட்டும் வேண்டும், கேள்வி கூடாதா?:  நீடிக்கும் பிஎம் கேர்ஸ் மர்மம்

பணம் மட்டும் வேண்டும், கேள்வி கூடாதா?: நீடிக்கும் பிஎம் கேர்ஸ் மர்மம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com