• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home பொருளாதாரம்

மருந்து தயாரிப்பில் 67 சதவீதம் சீனாவை சார்ந்துள்ள இந்தியா: ஆய்வறிக்கையில் தகவல்

by எம்.மலைமோகன்
19/08/2020
in பொருளாதாரம்
0
மருந்து தயாரிப்பில் 67 சதவீதம் சீனாவை சார்ந்துள்ள இந்தியா: ஆய்வறிக்கையில் தகவல்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லையில் சீனப் படைகள் ஊடுருவியபின், அதனைத் தடுத்த இந்திய ராணுவ வீரர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

சீனப் படைகள் இன்னும் இந்திய எல்லைக்குள்ளேயே இருப்பதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை உறுதி செய்தாலும், பிரதமர் மோடி ஊடுருவல் இல்லை என முரண்பட்ட தகவலை அளித்து வருகிறார்.

இதற்கிடையே, சீன செயலிகளை மோடி அரசு தடை செய்தது. சீனப் பொருட்களையும் ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டும் என, பா.ஜ.க. வினர் போராட்டம் நடத்தினர்.

எனினும், சீனாவுடனான வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்வது சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்தது. குறிப்பாக, மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் சீனாவையே இந்தியா சார்ந்திருப்பதால், இது சாத்தியமில்லை என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

மருந்து தயாரிப்புக்கான வேதியியல் மூலக்கூறுகளை சீனாவிலிருந்தே இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. வணிக உறவை உடனே முறித்துக் கொண்டால், இத்தகைய மூலக்கூறுகளை இந்தியாவில் உடனே உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனவும் அவர்கள் கோடிட்டுக் காட்டினர்.

கொரோனா பாதிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் சீனாவுடனான மோதல் ஆகியவற்றால் மருத்துவத் துறையில் ஏற்படப் போகும் பாதிப்பு குறித்து மத்திய அறிவியல் அமைச்சக ஆலோசனை குழுவான, ‘தொழில்நுட்ப தகவல் முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில்’ ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

சீனாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, நம்மிடம் போதிய கட்டமைப்பு இல்லாத வேதியியல் தொழில்துறையை மேம்படுத்த மத்திய அரசு சிந்தித்து வருகிறது.

குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்புடன், குறைந்த செலவில், வேதியியல் பொருட்களை தயாரிப்பதற்கான கட்டமைப்பு இந்தியாவிடம் இல்லை. சீனாவிலிருந்து கிடைக்கும் விலைக்கு அதிகமாக வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தால், அதனை உற்பத்தியாளர்களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரைப்பான் மற்றும் வேதியியல் பொருட்களின் இந்திய தயாரிப்பு விலையை விட சீன தயாரிப்பு 15 சதவீதம் குறைவாக உள்ளது.  

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஆகிய மருந்துகளைப் பொறுத்தவரை, சீனாவையே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.

முக்கிய மருந்துகளை தயாரிப்பதை இந்தியா நிறுத்திவிட்டது. 2008 ஆம் ஆண்டு இந்திய மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி 42 சதவீதமாக இருந்தது.  ஆனால் 2018 ஆம் ஆண்டு 20 சதவீதமாக குறைந்தது.

அஸ்கார்பிக் ஆசிட், அஸ்பார்டேம் மற்றும் ரிபாம்பிஸின், டோக்ஸிசைக்ளின், டஜோபாக்டம் ஆசிட் போன்ற மருந்துகள் தயாரிப்பை இந்தியா நிறுத்திவிட்டது.

மருந்து தயாரிப்புக்கான 67 சதவீத வேதியியல் மூலக்கூறுகளுக்கு சீனாவையே சாரந்து இருக்க வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. மருந்து தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் இத்தாலிக்கு அடுத்ததாக, சீனாவை சார்ந்திருக்கும் நாடு இந்தியாவாகும்.

இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: india depends on china for medicine
Previous Post

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : உற்பத்தியை தொடங்க ரஷ்யா மும்முரம்

Next Post

மகாத்மா காந்தியிடம் எத்தகைய இந்துத்வா கோட்பாட்டை கற்க முடியும்? - சுவாமிநாதன் எஸ். அங்ளேஷரிய அய்யர்

எம்.மலைமோகன்

எம்.மலைமோகன்

Next Post
மகாத்மா காந்தியிடம் எத்தகைய இந்துத்வா கோட்பாட்டை கற்க முடியும்? – சுவாமிநாதன் எஸ். அங்ளேஷரிய அய்யர்

மகாத்மா காந்தியிடம் எத்தகைய இந்துத்வா கோட்பாட்டை கற்க முடியும்? - சுவாமிநாதன் எஸ். அங்ளேஷரிய அய்யர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com