• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home கருத்தாய்வு

ராஜீவ் தியாகியை காவு வாங்கிய ‘விஷம்’ கலந்த ஊடக விவாதம்: காங்கிரஸ் தலைவர்கள் ஆவேசம்

by ஆ. கோபண்ணா
14/08/2020
in கருத்தாய்வு
0
ராஜீவ் தியாகியை காவு வாங்கிய ‘விஷம்’ கலந்த ஊடக விவாதம்: காங்கிரஸ் தலைவர்கள் ஆவேசம்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

கடந்த புதன்கிழமை தொலைக்காட்சியின் விவாத நேரடி ஒளிபரப்பில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி கலந்து கொண்டார். அப்போது விவாதத்தின் போது உணர்ச்சிவயப்பட்ட அவர்,   ஆயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, உடல்நலம் குன்றி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுபோன்ற காட்சி ஊடகங்களின் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இது அபாயகரமான செயல்பாடு என்றும் அகமது பட்டேல் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விவாதத்தின்போது, ராஜீவ் தியாகிக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய பாஜக செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ராவை கைது செய்யுமாறு சில கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடந்தது என்ன?

பெங்களூரு கலவரம் குறித்து  ‘ஆஜ் தக்’ தொலைக்காட்சியில் கடந்த புதன்கிழமை மாலை 5 மணிக்கு ராஜீவ் தியாகி வீட்டிலிருந்தபடி பங்கேற்ற காணொலி விவாதம் தான் அவரது கடைசி நிகழ்ச்சியாக முடிந்தது. தொலைக்காட்சி விவாதத்தின்போது, மாரடைப்பு ஏற்பட்டதால், ராஜீவ் தியாகியை அவரது குடும்பத்தினர் கெய்ஜாபாத்தில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சைக்குப் பின்பும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

இது குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அகமது பட்டேல், ”இத்தகைய விவாதங்களின் அர்த்தமற்ற, நச்சுத் தன்மையுடைய அபாயகரமான செயல்பாட்டை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி  தொலைக்காட்சி ஆசிரியர்களும், நெறியாளர்களும் யோசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சில சமயங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தை, துப்பாக்கிக் குண்டுக்கு இணையானதாக இருக்கும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல்  தொடர்பு ஒருங்கிணைப்பாளர் கவுரவ் பந்தி தமது ட்விட்டர் பதிவில், ”விவாதத்தில் தியாகியைப் பார்த்து பத்ரா பேசிய வார்த்தைகளை காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். விவாதத்தின்போது, ராஜீவ் தியாகியைப் பார்த்து  பத்ரா  பேசும் மோசமான வார்த்தைகளைப் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

”நெற்றியில் பொட்டு வைப்பதால் ஒருவர் உண்மையான இந்துவாக மாறிவிடமாட்டார். நீங்கள் நெற்றியில் பொட்டு வைக்க விரும்பினால், இதயப்பூர்வமாக வைக்க வேண்டும்” என்று பாஜகவின் பத்ரா  பேசினார். பெங்களூருவில் வீடு எரிப்புக்கு யார் காரணம் என்று கூற உங்களுக்கு தைரியம் உள்ளதா? என கேட்டார்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறும்போது, நோயாளிகள் மற்றும் மிதமான குரலில் உரையாடுவோரின் உயிர்களை, எவ்வளவு காலத்துக்கு நச்சுத் தன்மைவாய்ந்த விவாதங்களும், விஷத்தை கக்கும் நெறியாளர்களும் பறிக்கப்போகிறார்களோ? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகருக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் எழுதியுள்ள கடிதத்தில், அவதூறு, பரபரப்பு மற்றும் நச்சு கலந்த தொலைக்காட்சி விவாதங்களை கட்டுப்படுத்த ஊடகங்களுக்கு நடத்தை விதிகளை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

”பார்ப்போரின் காதுகளின் ஜவ்வு கிழியும் அளவுக்கு விவாதங்களில் பங்கேற்போரை சூடாக்கி கத்தவிடும் விளையாட்டை காட்சி ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும், குறிப்பாக, பாஜகவின் பத்ரா போன்றவர்களை ஊக்குவிப்பதையும் தவிர்க்க வேண்டும்” என்று இளைஞர் காங்கிரஸின் தேசிய பிரச்சாரக் குழு பொறுப்பாளர் ஒய்.பி. ஸ்ரீவத்சவா கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துமீறி போய்க் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளின் விவாதங்களுக்கு, ராஜீவ் தியாகியின் மரணமாவது முற்றுப்புள்ளி வைக்குமா?

Tags: rajiv tyagitv debates
Previous Post

இந்திய குடிமைப் பணி தேர்வு: யூபிஎஸ்சி வைத்த கட் -'ஆப்பு'

Next Post

பி.எம். கிசான் திட்டம்: 30,000 போலி பயனாளிகள்! ரூ. 1000 கோடி முறைகேடு!

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
பிரதமர்-கிசான்-சம்மான்-நிதித்-திட்டம்-2019-தகுதியுடையவர்கள்-யார்-யார் (1)

பி.எம். கிசான் திட்டம்: 30,000 போலி பயனாளிகள்! ரூ. 1000 கோடி முறைகேடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com